சனாதன தர்மம் என்றால் என்ன? (Sanatana Dharma Meaning in Tamil)
இந்து சனாதன தர்மம் என்று எதுவும் இல்லை. அது வெறுமனே சனாதன தர்மம். சனாதனம் என்றால் மாறாதது. மாறாத ஒன்று எப்போதும் உண்மையானது.
சனாதன தர்மம் என்பது வாழ்வின் மாறாத பரிமாணமாக, நமது இருப்பின் அல்லது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. அது புழுவாக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், அவை அனைத்தும், அதனதன் இருப்பை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளான சனாதன தர்மத்தால் ஆளப்படுகின்றன. இது சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான ஒற்றுமைக்காக, ஒருவருக்கொருவர் மனிதர்களால் விதிக்கப்பட்ட தண்டனைச் சட்டம் அல்ல. பரிவர்த்தனைச் சட்டங்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மாற வேண்டும். அது வேறொரு விஷயம். சனாதன தர்மம் ஒரு பரிவர்த்தனை தர்மம் அல்ல - இது ஒரு உயிரின் தர்மம்.
தர்மம் என்றால் என்ன? (Dharma Meaning in Tamil)
"தர்மம்" என்ற வார்த்தையைப் புரிந்துகொள்வோம். தர்மம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். தர்மம் என்றால் மதம் அல்ல. இந்தக் கலாச்சாரத்தில், மதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை சிறந்த முறையில் நிகழ்வதற்கான அடிப்படை விதிமுறைகள் என்ன என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம். நீங்கள் இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், உங்கள் வாழ்க்கை நல்லபடியாக நிகழமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த விதிமுறைகள் ஒரு திணிப்பாக இல்லாமல், இருப்பின் அடித்தளமாக இருக்கின்றன. நீங்கள் விதிமுறைகளை அறிந்துகொண்டு, அவற்றுடன் ஒத்துப்போகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை சிரமமின்றி நிகழ்கிறது. நீங்கள் அறிந்துகொள்ளாவிட்டால், எந்த காரணமும் இல்லாமல் துன்பமடைய நேரிடும்.
ஒரு இந்து அல்லது ஒரு இந்திய நபர் அல்லது வேறெந்த நபருக்காவது சனாதன தர்மம் உரிமையானதா என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும், இந்தியராக இருந்தாலும், இந்து மற்றும் இந்து அல்லாதவர் என்று நீங்கள் என்னவாக இருந்தாலும், சனாதன தர்மம் அனைவருக்கும் பொருந்துகிறது, ஏனென்றால் இவை வாழ்வின் அல்லது உயிரின் அடிப்படையான செயல்முறைக்கு வழிகாட்டும் விதிமுறைகள். வேறு எந்த கலாச்சாரமும் இதை இவ்வளவு ஆழமாகப் பார்க்கவில்லை. அந்தப் பெருமிதத்தின் காரணமாக, "இது இந்து சனாதன தர்மம்" என்று நாம் கூறலாம். ஆனால் "இந்து" என்ற வார்த்தையைச் சேர்ப்பதன் மூலம் சனாதன தர்மத்தின் சாத்தியத்தை நாம் குறைத்துவிடுகிறோம். இந்து என்பது ஒரு புவியியல் அடையாளம். இந்து என்பது இமயமலைக்கும், இந்து மகா சமுத்திரத்துக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பு. சனாதன தர்மம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் பொருந்துகிறது. இது இன்னமும் பிறந்திராதவர்கள், பிறந்துவிட்டவர்கள், பெரியவர்கள், இறந்துவிட்டவர்கள், வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் வாழ்வின் அனைத்து பரிமாணங்கள் அனைத்தையும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிப் பேசுகிறது. இது வாழ்வை மிகவும் ஆழமாக உற்று நோக்குவதற்கான ஒரு வழியாக இருக்கிறது.
ஸ்மிருதி மற்றும் ஸ்ருதி
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தால், வித்தியாசமாக உடையணிந்துகொண்டு, வேறெதையாவது செய்துகொண்டு இருந்திருப்பீர்கள். நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், மறுபடியும் வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்துகொண்டு இருந்திருப்பீர்கள் - ஒருவேளை நீங்கள் ஒரு விவசாயியாக அல்லது ஒரு மீனவராக இருந்திருக்கலாம்.

Comments
Post a Comment